House becomes 5ft taller after heavy rains || பள்ளத்தில் உள்ள வீட்டை உயர்த்தும் நவீன தொழில்நுட்பம்!

House becomes 5ft taller after heavy rains  ||  பள்ளத்தில் உள்ள வீட்டை உயர்த்தும் நவீன தொழில்நுட்பம்!



வீட்டை உயர்த்துவதால் தரைத்தளம் மட்டும் சிறிது சேதமாகும். சுவரில் விரிசலும் விழாது.
house becomes 5ft taller after heavy rains

நாமக்கலில் பள்ளத்தில் உள்ள வீடு நவீனத் தொழில்நுட்பம் மூலம் 5 அடி மேலே உயர்த்தப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் கொங்குநகரை சேர்ந்தவர் வீரமணி. அப்பகுதியில் பல முறை சாலை சீரமைக்கும் பணியின் பெயரில் சாலை உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், வீரமணியின் வீடு சாலையிலிருந்து பள்ளத்திற்குப் போய்விட்டது. மழை பெய்தால் பள்ளத்தில் தண்ணீர் தீங்கி வீட்டுக்குள்ளும் புகுந்து சிரமம் ஏற்பட்டுகிறது. 

இந்நிலையில், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனது வீட்டை இடிக்காமலே 5 அடிக்கு வீட்டுக் கட்டிடத்தை அலேக்காக உயர்த்த திட்டமிட்டார் வீரமணி. அதன்படி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜி என்ற என்ஜினியரை வரவழைத்துள்ளார். பிரத்யோகமாக ஜாக்கிகள் உதவியுடன் வீட்டிக் கட்டிடம் இடிக்கப்படாமல், அடியோடு பெயர்க்கப்பட்டு 5 அடி உயரம் மேல் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

வீட்டின் பக்க சுவர்கள் அருகில் 2 அடி அகலத்துக்கு பள்ளம் தோண்டி, அதன் கீழ் ஒவ்வொரு பாகமாக இரும்பு ஜாக்கிகள் வைக்கப்பட்டு வீட்டின் உயரம் மேலே ஏற்றப்பட்டுகிறது. ஒரு பாகத்திற்கு ஏறத்தாழ 200 இரும்பு ஜாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு வீட்டை உயர்த்துவதால் தரைத்தளம் மட்டும் சிறிது சேதமாகும். சுவரில் விரிசலும் விழாது.

இதில் 20 பேர்க்கு மேல் பணியாற்றி வருகிறார்கள். 1500 சதுர அடி பரப்பும் 40 டன் எடையும் கொண்ட வீரமணியின் வீடு 1985ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இன்னும் 2 வாரத்தில் இந்த வீடு 5 அடி உயரத்தில் நிலைபெற்றுவிடும். 


Comments