Facebook Confirms 29 Million Users Information Has Been Stolen || 29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்!!

29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்!!



பேஸ்புக்கில் சுமார் 29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

facebook confirms 29 million users information has been stolen

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சுமார் 29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் உறுதிசெய்துள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம், பேஸ்புக் நிறுவனம் ஹேக்கர்கள் பேஸ்புக்கின் டிஜிட்டல் உள்நுழைவு குறியீடுகளை திருடிவிட்டதாக அறிவித்தது. இந்தக் குறியீடுகளை வைத்து சுமார் 50மில்லியன் பயனர்களின் கணக்குகளை அணுக முடியும் எனவும் தெரிவித்தது. இருப்பினும், இதில் எத்தனை கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டன. என்ன என்ன தகவல்கள் திருடப்பட்டன உள்ளிட்ட எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. 

உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்குப் பின், பயனர்கள் அனைவரும் தங்கள் பேஸ்புக் கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பேஸ்புக் நிறுவனம் அறிவுரை வழங்கியது. 

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் நடத்திய விசாரணையில், ஹேக்கர்கள் சுமார் 30 மில்லியன் கணக்குகளை அணுகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதில், 29 மில்லியன் பயனர்களின் கணக்குகளிலிருந்து தகவல்கள் திருடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட 29 மில்லியன் பயனர்களின் கணக்குகளில், 15 மில்லியன் பயனர்களின் பெயர், போன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி அல்லது இரண்டையும் பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தால், இரண்டையும் திருடியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மீதமுள்ள 14 மில்லியன் பயனர்களின் கணக்குகளில் பயனர் பெயர், முகவரி, போன் எண், மின்னஞ்சல் முகவரி, பாலினம், மொழி, தற்போதைய உறவுநிலை, மதம், சொந்த ஊர், தற்போது வசிக்கும் நகரம், பேஸ்புக்கில் உள்நுழைய பயன்படுத்திய சாதனங்கள், கல்வித் தகுதி, வேலை, கடைசியாக அவர்கள் செக்-இன் அல்லது டேக் செய்யப்பட்ட 10 பதிவுகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களைத் திருடியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எப்பிஐ கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இதில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விவரத்தை வெளியிட முடியாது என பேஸ்புக் தெரிவித்துள்ளது. 



Comments