Fake Bank Apps May Have Stolen Data Of Thousands Of Customers: Report

ஏழு வங்கிகள் பெயரில் போலி ஆப் மூலம் தகவல் திருட்டு


போலியான அப்ளிகேஷன்கள் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யெஸ் பேங், சிட்டி வங்கி ஆகிய ஏழு வங்கிகளைக் குறிவைத்துள்ளன என சோபோஸ் அறிக்கை எச்சரிக்கிறது.


fake bank apps may have stolen data of thousands of customers: report

Highlights

  • போலியான அப்ளிகேஷன்கள்களை இன்ஸ்டால் செய்த வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் திருடப்பட்டுள்ளன.
  • அதில் உள்ள மால்வேர் (Malware) வங்கி விவரங்களைத் திருடியிருக்கலாம்.
வங்கிகளின் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் வங்கித் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் முன்னணி வங்கிகளான ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி உள்ளிட்டவற்றின் பெயரில் கூகுள் பிளே ஸ்டோரில் போலியான அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை இன்ஸ்டால் செய்த வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் திருடப்பட்டுள்ளன என சோபோஸ் லாப்ஸ் (Sophos Labs) என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு தொடர்பாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் அறிக்கையில், போலியான வங்கி அப்ளிகேஷன்கள் வங்கிகளின் லோகோவையே பயன்படுத்துவதால் அவற்றை எளிதில் வித்தியாசப்படுத்துவது கடினம் என்று கூறப்பட்டுள்ளது. 

அந்த அப்ளிகேஷன்களுடன் இணைந்திருக்கும் மால்வேர் (Malware) ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களைத் திருடியிருக்கலாம் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளைத் தொடர்புகொண்டபோது இது தொடர்பான பதிலளிக்க யாரும் முன்வரவில்லை. சில வங்கிகள் இது தொடர்பாக தேசிய கணினி பாதுகாப்புக்கான CERT-In என்ற நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளன. 

போலியான அப்ளிகேஷன்கள் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யெஸ் பேங், சிட்டி வங்கி ஆகிய ஏழு வங்கிகளைக் குறிவைத்துள்ளன எனவும் சோபோஸ் அறிக்கை எச்சரிக்கிறது.

Comments