ஆன்லைன் மூலம் வேலை வாங்கித்தருவதாக ரூ.12 லட்சம் அபேஸ்
பலரது விண்ணப்பங்கள் வேளாண் அமைச்சகத்தின் அலுவகத்துக்கு தொடர்ந்து வந்து குவியத் தொடங்கியதால், சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் போலியான இணையதளம் மூலம் பலர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

Highlights
இன்னும் 3 பேருக்கு இதில் தொடர்பிருப்பதால் அவர்களையும் பிடிக்கும் வரை கைதானவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட முடியாது என போலீசார் கூறியுள்ளனர். ஆனால், கைதான இருவருமே வேறு வேலை இல்லாதவர்கள் என்று மட்டும் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசில் வேலை வாங்கித்தருவதாக சுமார் 3000 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.12 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய வேளாண் துறையில் வேலை வாங்கித்தருவதாக panditdeendayalkrishivikas.com என்ற இணையதளம் மூலம் இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது. மத்திய வேளாண்துறை அமைச்சகத்தின் முகவரி இணையதளத்தில் குறிப்பிட்டு விண்ணப்பங்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு விண்ணப்பத்துக்கு தலா ரூ.400 வீதம் சுமார் 3000 பேரிடம் அந்த இணையதளம் வாயிலாகவே பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்ற அவகாசமும் அந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பலரது விண்ணப்பங்கள் வேளாண் அமைச்சகத்தின் அலுவகத்துக்கு தொடர்ந்து வந்து குவியத் தொடங்கியதால், சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் போலியான இணையதளம் மூலம் பலர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
மத்திய வேளாண் துறையில் வேலை வாங்கித்தருவதாக panditdeendayalkrishivikas.com என்ற இணையதளம் மூலம் இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது. மத்திய வேளாண்துறை அமைச்சகத்தின் முகவரி இணையதளத்தில் குறிப்பிட்டு விண்ணப்பங்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு விண்ணப்பத்துக்கு தலா ரூ.400 வீதம் சுமார் 3000 பேரிடம் அந்த இணையதளம் வாயிலாகவே பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்ற அவகாசமும் அந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பலரது விண்ணப்பங்கள் வேளாண் அமைச்சகத்தின் அலுவகத்துக்கு தொடர்ந்து வந்து குவியத் தொடங்கியதால், சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் போலியான இணையதளம் மூலம் பலர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் உள்ள வீட்டிலிருந்து இருவரைக் கைது செய்துள்ளனர். இன்னும் 3 பேருக்கு இதில் தொடர்பிருப்பதால் அவர்களையும் பிடிக்கும் வரை கைதானவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட முடியாது என போலீசார் கூறியுள்ளனர். ஆனால், கைதான இருவருமே வேறு வேலை இல்லாதவர்கள் என்று மட்டும் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment