தினமும் 5 லட்சம் பயணிகள்: நம்ம மெட்ரோ சாதனை
தற்போது ஒருநாளில் சராசரி பயணிகள் எண்ணிக்கை 4 லட்சமாகவும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு கோடி ரூபாயாகவும் உள்ளது. அடுத்த ஆண்டில் ஒருநாள் பயணிகள் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Highlights
- பெங்களூரில் இயங்கும் நம்ம மெட்ரோ, மெட்ரோ ரயில் சேவையை கடந்த புதன்கிழமை 4.5 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.
- முன்பு கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி 4.4 லட்சம் பேர் பயணித்திருக்கிறார்கள்.
பெங்களூரு நம்ம மெட்ரோ ரயில்வே சேவையின் ஒருநாள் பயணிகள்எண்ணிக்கை விரைவில் 5 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் இயங்கும் நம்ம மெட்ரோ, மெட்ரோ ரயில்சேவையை கடந்த புதன்கிழமை 4.5 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். மைசூரு ரோடு - பையபனஹள்ளி வழித்தடத்தில் 2.4 லட்சம் பேரும் நாகசந்திரா - எலசெனஹள்ளி வழித்தடத்தில் 2.1 லட்சம் பேரும் பயணித்துள்ளனர்.
இதுவே பெங்களூரு மெட்ரோவில் ஒருநாளில் பதிவான அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கை ஆகும். முன்பு கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி 4.4 லட்சம் பேர் பயணித்திருக்கிறார்கள்.
தற்போது ஒருநாளில் சராசரி பயணிகள் எண்ணிக்கை 4 லட்சமாகவும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு கோடி ரூபாயாகவும் உள்ளது. அடுத்த ஆண்டில் ஒருநாள் பயணிகள் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் இயங்கும் நம்ம மெட்ரோ, மெட்ரோ ரயில்சேவையை கடந்த புதன்கிழமை 4.5 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். மைசூரு ரோடு - பையபனஹள்ளி வழித்தடத்தில் 2.4 லட்சம் பேரும் நாகசந்திரா - எலசெனஹள்ளி வழித்தடத்தில் 2.1 லட்சம் பேரும் பயணித்துள்ளனர்.
இதுவே பெங்களூரு மெட்ரோவில் ஒருநாளில் பதிவான அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கை ஆகும். முன்பு கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி 4.4 லட்சம் பேர் பயணித்திருக்கிறார்கள்.
தற்போது ஒருநாளில் சராசரி பயணிகள் எண்ணிக்கை 4 லட்சமாகவும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு கோடி ரூபாயாகவும் உள்ளது. அடுத்த ஆண்டில் ஒருநாள் பயணிகள் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு மெட்ரோவில் மொத்தம் 50 ரயில்கள் உள்ளன. இதில் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் தற்போது இரண்டு மட்டுமே இயக்கப்படுகின்றன. அனைத்து ரயில்களையும் ஆறு பெட்டிகள் கொண்டதாக மாற்றினால் பயணிகள் எண்ணிக்கை உயரும். இம்முயற்சியின் அடுத்த படியாக வரும் நவம்பரில் மூன்றாவது ஆறு பெட்டிகள் கொண்ட ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் அஜய் சேத் இது பற்றிக் கூறும்போது, "சிறு மாற்றங்கள்கூட பயணிகள் எண்ணிக்கையை உயர்த்த பயன்படும். கெம்பேகௌடா ரயில் நிலையத்திலிருந்தும் பேருந்து நிலையத்திலிருந்தும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பாதை பாலம் அமைத்தது பயணிகள் எண்ணிக்கை 7000-8000 வரை அதிகரிக்க வைத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் அஜய் சேத் இது பற்றிக் கூறும்போது, "சிறு மாற்றங்கள்கூட பயணிகள் எண்ணிக்கையை உயர்த்த பயன்படும். கெம்பேகௌடா ரயில் நிலையத்திலிருந்தும் பேருந்து நிலையத்திலிருந்தும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பாதை பாலம் அமைத்தது பயணிகள் எண்ணிக்கை 7000-8000 வரை அதிகரிக்க வைத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment