#MeToo இயக்கம்: செய்தி வெளியீடு பற்றிய கொள்கை
இந்தியாவில் மிகப்பெரிய ஊடகமாகத் திகழும் டைம்ஸ் குழுமத்திலிருந்து (Times of India) வெளியாகும் செய்திகள் நெறிமுறைகள் சார்ந்த தரப்படுத்தலுடன் இருக்கும். அதன்படியே #MeToo இயக்கம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகளையும் தொடர்ந்து வெளியிடுவோம்.

#MeToo இயக்கத்தை சமயம் தமிழ் மதிக்கவும் ஆதரிக்கவும் செய்கிறது. பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் தைரியமாக வெளியிடும் புகார்கள் பற்றி தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது.
மிகப்பெரிய மக்கள்திரளைச் சென்றடையும் ஊடகம் என்ற முறையில் எங்களுக்கு உள்ள கூடுதல் பொறுப்பைப் பற்றியும் கவனமாக இருக்கிறோம். செய்திகள் வெளியிடும்போது பின்பற்ற வேண்டிய நெறியாக இந்தப் பொறுப்புணர்வு உள்ளது என்பதை உணர்ந்துள்ளோம். எனவே, பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் பற்றி செய்தி வெளியிடும்போது பெயரைக் குறிப்பிடாமல் செய்தியை வழங்குவது என முடிவுசெய்திருக்கிறோம்.
சொல்பவரின் அடையாளம் தெரியாத மற்றும் உறுதிசெய்ய முடியாத குற்றச்சாட்டுகளை ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்கள் அவதூறு பரப்பும் கீழான நோக்கத்தையும் கொண்டிருக்கலாம் என்பதால் தகவல்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்கள் தங்களது நிஜமான அனுபவத்தை பகிரும்போது, பயத்தாலும் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கத்தைப் பேணவும் அடையாளத்தை வெளியிடாமல் இருக்க விருப்பக்கூடும் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அதே சமயத்தில் சமயம் தமிழ் இணையதளம் பொய்யான, உள்நோக்கம் கொண்ட அல்லது அவதூறான புகார்களைப் பரப்புவதற்கு தவறாக பயன்படுத்தப்படக் கூடாது.
இதனால், அடையாளத்தை வெளியிடாமல் சமூக வலைத்தளங்களில் புகார் கூறப்பட்டால் அதனை செய்தியாக வெளியிடப்போவதில்லை. குற்றம்சாட்டும் நபர் பொதுவெளிக்கு வந்தாலோ அல்லது அவர் சார்ந்த அமைப்பு பொதுவெளியில் கருத்துகூறினாலோ அது பற்றி செய்தி வெளியிட வாய்ப்பு ஏற்படும்.
மற்ற செய்தி வெளியீட்டகங்கள், இணையதளங்கள், தொலைக்காட்சிச் சேனல்கள் தொடர்ந்து அடையாளத்தை வெளியிடாதவர்களின் குற்றச்சாட்டுகளை செய்தியாக வெளியிடலாம். சமயம் தமிழ் இனி அதுபோன்ற செய்தியை தரப்போவதில்லை. இந்தியாவில் மிகப்பெரிய ஊடகமாகத் திகழும் டைம்ஸ் குழுமத்திலிருந்து (Times of India) வெளியாகும் செய்திகள் நெறிமுறைகள் சார்ந்த தரப்படுத்தலுடன் இருக்கும். அதன்படியே #MeToo இயக்கம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகளையும் தொடர்ந்து வெளியிடுவோம்.
பாதுகாப்பான பணிச்சூழலை அதன் ஊழியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் பி.சி.சி.எல். (BCCL) நிறுவனமும் உறுதியுடன் இருக்கிறது. பணி இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை சிறிதும் சகித்துக்கொள்ளாமல் நடவடிக்கை எடுக்கும் வகையில் வலிமையான POSH கொள்கையையும் பின்பற்றுகிறது.
மிகப்பெரிய மக்கள்திரளைச் சென்றடையும் ஊடகம் என்ற முறையில் எங்களுக்கு உள்ள கூடுதல் பொறுப்பைப் பற்றியும் கவனமாக இருக்கிறோம். செய்திகள் வெளியிடும்போது பின்பற்ற வேண்டிய நெறியாக இந்தப் பொறுப்புணர்வு உள்ளது என்பதை உணர்ந்துள்ளோம். எனவே, பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் பற்றி செய்தி வெளியிடும்போது பெயரைக் குறிப்பிடாமல் செய்தியை வழங்குவது என முடிவுசெய்திருக்கிறோம்.
சொல்பவரின் அடையாளம் தெரியாத மற்றும் உறுதிசெய்ய முடியாத குற்றச்சாட்டுகளை ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்கள் அவதூறு பரப்பும் கீழான நோக்கத்தையும் கொண்டிருக்கலாம் என்பதால் தகவல்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்கள் தங்களது நிஜமான அனுபவத்தை பகிரும்போது, பயத்தாலும் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கத்தைப் பேணவும் அடையாளத்தை வெளியிடாமல் இருக்க விருப்பக்கூடும் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அதே சமயத்தில் சமயம் தமிழ் இணையதளம் பொய்யான, உள்நோக்கம் கொண்ட அல்லது அவதூறான புகார்களைப் பரப்புவதற்கு தவறாக பயன்படுத்தப்படக் கூடாது.
இதனால், அடையாளத்தை வெளியிடாமல் சமூக வலைத்தளங்களில் புகார் கூறப்பட்டால் அதனை செய்தியாக வெளியிடப்போவதில்லை. குற்றம்சாட்டும் நபர் பொதுவெளிக்கு வந்தாலோ அல்லது அவர் சார்ந்த அமைப்பு பொதுவெளியில் கருத்துகூறினாலோ அது பற்றி செய்தி வெளியிட வாய்ப்பு ஏற்படும்.
மற்ற செய்தி வெளியீட்டகங்கள், இணையதளங்கள், தொலைக்காட்சிச் சேனல்கள் தொடர்ந்து அடையாளத்தை வெளியிடாதவர்களின் குற்றச்சாட்டுகளை செய்தியாக வெளியிடலாம். சமயம் தமிழ் இனி அதுபோன்ற செய்தியை தரப்போவதில்லை. இந்தியாவில் மிகப்பெரிய ஊடகமாகத் திகழும் டைம்ஸ் குழுமத்திலிருந்து (Times of India) வெளியாகும் செய்திகள் நெறிமுறைகள் சார்ந்த தரப்படுத்தலுடன் இருக்கும். அதன்படியே #MeToo இயக்கம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகளையும் தொடர்ந்து வெளியிடுவோம்.
பாதுகாப்பான பணிச்சூழலை அதன் ஊழியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் பி.சி.சி.எல். (BCCL) நிறுவனமும் உறுதியுடன் இருக்கிறது. பணி இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதை சிறிதும் சகித்துக்கொள்ளாமல் நடவடிக்கை எடுக்கும் வகையில் வலிமையான POSH கொள்கையையும் பின்பற்றுகிறது.
Comments
Post a Comment